தமிழகம் முழுவதும் உதயமாகிறது ஓபிஎஸ் நற்பணி மன்றம்...டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 'ஷாக்'
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பெயரில் நற்பணி மன்றங்கள் மாநிலம் முழுக்கத் தொடங்க வடசென்னையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: டிடிவி தினகரன் பேரவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பதிலடியாக ஓபிஎஸ் அணியினரும் அவர் பெயரில் நற்பணி மன்றம் தொடங்க உள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்பு அக்கட்சி இரண்டாக மூன்றாகப் பிரிந்து கிடக்கிறது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக (புரட்சி தலைவி அம்மா) அணி என்றும், தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக (அம்மா) அணி என்று இரு அணிகளாக செயல்படுகின்றன.
இரண்டு அணிகளும் இணையும் என்று அதிமுகவினர் எதிர்பார்க்கும் நேரத்தில் அதற்கு எந்த ஏற்பாடும் இல்லாமல் இருப்பது மேலும் அதிமுக பிரமுகர்கள் மத்தியில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் நற்பணி மன்றம்
வட சென்னையில் ஒ.பி.எஸ் நற்பணி மன்றம் வெகு விரைவில் திறக்கப்படவுள்ளது. இதற்காக முன்னாள் அமைச்சர் மதுசூதனன் தலைமையில் அவரது அலுவலகத்தில் நேற்று தீவிர ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த நற்பணி மன்றம் மூலம் இளைஞர்களையும், மாணவர்களையும் ஓ.பி.எஸ்.அணிக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை வட சென்னையில் வலுப்படுத்த திட்டம் வைத்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.

டிடிவி தினகரன் பேரவை
திகார் சிறையில் இருக்கும் தினகரன் பெயரில் பேரவை ஒன்றை அவரின் ஆதரவாளர்கள் ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கினர். அதே போல ஓபிஎஸ் அணியினரும் மன்றம் தொடங்கும் நிலைக்குச் சென்றுள்ளனர். ஆக இப்போதைக்கு அதிமுக அணிகள் இணைப்புச் சாத்தியமில்லை என்று தெரிவிக்கிறார்கள் அதிமுகவினர்.

அதிமுக இணைப்பை தடுக்கும் அமைச்சர்கள்
அதிமுக அமைச்சர்கள், இரண்டு அணிகளும் இணைவதைத் தடுக்கும் முயற்சியில் இருக்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, 2 அணிகளும் இணைந்து ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற உடன்பாடு உள்ளது. ஆனால் அவருடன் உள்ள சில அமைச்சர்கள், 2 அணிகளும் இணைவதற்கு முட்டுக்கட்டைகள் போட்டுவருகிறார்கள்.

ஆட்சிக் கவிழும்
சசிகலாவும், தினகரனும் தொடர்ந்து கட்சி பதவியில் நீடித்தால் விரைவில் எடப்பாடி பழனிசாமி அரசு கவிழ்வது நிச்சயம். ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரு அணிகளும் ஒருங்கிணைந்தால் மட்டுமே ஜெயலலிதாவின் உண்மையான கனவு நிறைவேற்றப்படும்." என்றார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications