ஓபிஎஸ் கனவு பலிக்காது.. செங்ஸ் ஆருடம்!

அதிமுக ஆட்சி கவிழும் என்ற ஓபிஎஸின் கனவு பலிக்காது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: அதிமுக ஆட்சி கவிழும் என்ற ஓபிஎஸின் கனவு பலிக்காது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுக ஆட்சிதான் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அருகே உள்ள செல்லம்பாளையத்தில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார்.

விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

ஒவ்வொருவருக்கும் ஒரு பேராசை

ஒவ்வொருவருக்கும் ஒரு பேராசை

அப்போது ஓ.பி.எஸ்,விரைவில் எடப்பாடி பழனிச்சாமி அரசு கவிழும் என்று கூறி உள்ளாரே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன் ஒவ்வொருவருக்கும் ஒரு பேராசை உண்டு அதன் அடிப்படையில் சுய விளம்பரத்துக்காக கருத்துக்களை கூறுவது ஏற்புடையது அல்ல என்றார்.

கனவு பலிக்காது

கனவு பலிக்காது

அரசு கவிழும் என்று யார் கூறி வந்தாலும் அந்த கனவு பலிக்காது. அது நனவாகாது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் உறுதியாகக் கூறினார்.

100 ஆண்டுகள்

100 ஆண்டுகள்

தமிழகத்தில் 50 ஆண்டுகள் அல்ல 100 ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க. ஆட்சிதான் நடைபெறும். இதை அனைவரும் பார்க்கத்தான் போகிறார்கள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

மீண்டும் சர்ச்சை

மீண்டும் சர்ச்சை

ஏற்கனவே இரு கோஷ்டிகளும் இணையும் என கூறப்பட்டு வந்த நிலையில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களின் முரணான கருத்தால் இழுபறி நிலவி வருகிறது. இந்நிலையில் ஓபிஎஸ் குறித்த செங்கோட்டையனின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+