அ.தி.மு.க.வின் அடுத்த தலைவர்... ஓ.பி.எஸ்.-க்கு செம ஆதரவு- சசிகலாவுக்கு தகுதி இல்லை- ஜூ.வி. சர்வே
சென்னை: அ.தி.மு.க.வின் அடுத்த தலைவராக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அதிக ஆதரவு இருப்பதாகவும் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு அந்த தகுதி இல்லை எனவும் ஜூனியர் விகடன் சர்வே தெரிவிக்கிறது.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டது. பின் மீண்டும் அ.தி.மு.க. ஒன்றாக இணைந்த காலம் முதல் அக்கட்சியின் சகலமுமாக இருப்பவர் ஜெயலலிதா மட்டுமே.
அவ்வப்போது அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவுக்கு அடுத்தது யார்? என்ற கேள்வி வரும்போதெல்லாம் அந்த இடத்துக்கு அடிபடுகிறவர் கட்சியில் நிலைத்ததாக இல்லை. தற்போது ஜெயலலிதாவுக்கு அடுத்தது சசிகலாவா? அல்லது ஓ. பன்னீர்செல்வமா என்ற நிலை அ.தி.மு.க.வில் உள்ளது.

ஜூவி சர்வே
இது தொடர்பாக ஜூனியர் விகடன் வாரம் இருமுறை ஏடு ஒரு சர்வே நடத்தி உள்ளது. மொத்தம் 16,846 பேரிடம் நடத்தப்பட்டது இந்த கருத்துக் கணிப்பு.

ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு
இதில் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்குத்தான் அதிக ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 38.41% பேர் அ.தி.மு.க.வின் அடுத்த தலைவராக வரத் தகுதியானர் ஓ.பி.எஸ். என கூறியுள்ளனர். அதாவது மொத்தம் 6,470 பேர் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மதுரை மண்டலத்தில்...
ஓ.பி.எஸ்.க்கு அவரது மதுரை மண்டலத்தில் 2,131 பேரும் சென்னை மண்டலத்தில் 2,063 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சசிக்கு தகுதி இல்லை
அதே நேரத்தில் அ.தி.மு.க.வின் அடுத்த தலைவராக வர சசிகலாவுக்கு தகுதி இல்லை என 93% பேர் கூறியுள்ளனர். மொத்தம் 7.25% பேர்தான் (1,222) சசிகலாவுக்கு தகுதி இருப்பதாக கூறியுள்ளனர்.

"இன்னொருவரு"க்கு 54% ஆதரவு
ஓ.பன்னீர்செல்வம், சசிகலா அல்லாமல் இன்னொருவரை அதிகம் பேர் விரும்புவதாகவும் கூறுகிறது இந்த கருத்து கணிப்பு.
அதாவது "மற்றவர்கள்" என்ற ஆப்சனுக்கு 54% பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக குறிப்பிடுகிறது ஜூ.வி. சர்வே.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம்












Click it and Unblock the Notifications