ரூ.3 கோடியையும், 3 கிலோ தங்கத்தையும் உதறியவர் செம்மலை.. ஓபிஎஸ் நெகிழ்ச்சி!
கூவத்தூர் சொகுசு ஹோட்டலில் வைத்து தரப்பட்ட ரூ. 3 கோடி ரொக்கமும், 3 கிலோ தங்கத்தையும் உதறிவிட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தவர் செம்மலை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் புகழாரம் சூட்டி
சென்னை: சசிகலா அணிக்கு ஆதரவு அளித்த எம்எல்ஏ-க்களுக்கு ரூ. 3 கோடி ரொக்கமும், 3 கிலோ தங்கமும் வழங்கப்பட்டது. அதை வேண்டாம் என்று உதறிவிட்டு மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்தவர் செமமலை என்று ஓ.பன்னீர் செல்வம் பெருமிதம் பொங்க தெரிவித்தார்.
சென்னையில் நடந்த ஈரோடு, நாமக்கல் மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் இன்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்திக்க யாரையும் அனுமதிக்காதபோது செங்கோட்டையனும், திண்டுக்கல் சீனிவாசனும் பார்த்ததாக கூறுவது ஆகாச பொய்யாகும்.

தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் அதிமுகவை காக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். காங்கிரஸ் ஆட்சியின்போது பாவலர் வரதராஜன் மேடையில் பாடும்போது ஒத்த ரூபா தர்றேன் என்று பாடுவார். அதுபோல கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏ-க்களுக்கு ரூ.3 கோடி ரொக்கமும், 3 கிலோ தங்கமும் வழங்கப்பட்டது.
அதை வேண்டாம் என்று கூறி விட்டு முகாமை விட்டு வெளியேறிய செம்மலை தனது தொகுதி மக்களிடம் 3 நாள்களாக கருத்தை கேட்டுவிட்டு, உங்கள் பணமும் வேண்டாம், தங்கமும் வேண்டாம் என்று உதறிவிட்டு எங்கள் அணிக்கு வந்துவிட்டார்.
முதல்வராக இருந்தால் ஆட்சியை எவ்வாறு தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். செம்மலை மட்டுமல்ல என்னுடன் உள்ள எம்எல்ஏ-க்கள் பணம், தங்கம் மீது மதிப்பளிக்காமல் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தனர் என்றார்.












Click it and Unblock the Notifications