தமிழக உள்கட்டமைப்புத் துறையில் சீன முதலீடுகள் வேண்டும் – சீனத் தூதரிடம் ஓபிஎஸ் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் உள்கட்டமைப்புத் துறையில் சீனா அதிக முதலீடுகள் செய்ய வேண்டும் என அந்நாட்டு தூதரிடம் முதல்வர் ஒ.பன்னீல்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவுக்கான சீன தூதர் லீ யுசென் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலைமைச்சர் பன்னீர் செல்வத்தைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது மே மாதம் சென்னையில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில், சீன தொழிலதிபர்கள் பங்கேற்க முதலமைச்சர் அழைப்பு விடுத்தார். இதே போல் சீனா வருமாறு முதலைமைச்சருக்கு தூதர் அழைப்பு விடுத்தார்.
மேலும், சென்னையில் சீன நாட்டின் துணை தூதரகம் விரைவில் அமைக்கப்படும் என அந்நாட்டு தூதர் தெரிவித்ததாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுளளது.












Click it and Unblock the Notifications