ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு... துணை முதல்வர் ஓபிஎஸ் உறுதி
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
நாகர்கோவில்: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் சேதம் குறித்த கணக்கெடுப்புக்கு பின்னர் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு வங்கக் கடலில் உருவான ஓகி புயல் தென் தமிழகத்தை பதம் பார்த்து சென்றுவிட்டது. இது சென்றாலும் சுவடுகள் செல்லாத வகையில் ஏராளமான சேதத்தை ஏற்படுத்திவிட்டது.

நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதால் அங்கு சென்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில் , கன்னியாகுமரி மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது. ரப்பர்,நெல், வாழை உள்ளிட்ட பயிர் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கப்படும். பயிர் சேதம் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

முறிந்து விழுந்த மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. 39 படகுகள் கரை திரும்பவில்லை. 33 படகுகளை தேடி வருகிறோம். படகு சேதமடைந்தவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும்.
கணக்கெடுப்பு பணி முடிந்தவுடன் நிவாரணம் வழங்கப்படும். 205 படகுகளில் மீனவர்கள் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்பாக உள்ளனர் என்றார் ஓபிஎஸ்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications