அதிமுகவின் பொதுச் செயலாளராக ஓபிஎஸ்தான் வர வேண்டும்.. சசிகலா இருக்கக் கூடாது.. பொன்னையன் ஆவேசம்
அதிமுகவின் பொதுச் செயலாளராக ஓபிஎஸ்தான் வர வேண்டும் என்று பொன்னையன் கூறியுள்ளார்.
சென்னை: சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஓபிஎஸ்ஸை நியமிக்க வேண்டும் என்று பொன்னையன் கூறியுள்ளார்.
நேற்று சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மைத்ரேயன் டெல்லி சென்று சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி தலைமைச் செயலாளர் நஜீம் ஜைதியை சந்தித்தார்.

கிட்டத்தட்ட அதே நேரத்தில், சென்னையில் பொன்னையன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தற்காலிக பொதுச்செயலாளர் என்று சசிகலாவை நியமிக்க முடியாது. கட்சியில் 5 ஆண்டு காலம் தொடர்ந்து இல்லாத சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்தது செல்லாது.
அதே போன்று அவரால் நியமிக்கப்பட்ட டிடிவி தினகரனின் நியமனமும் செல்லாது. அதிமுகவின் பொதுச்செயலாளராக பன்னீர்செல்வம் தான் வரவேண்டும். அதிமுகவின் சட்டவிதிகளின்படி பொதுச்செயலாளருக்கான வாக்குப்பதிவு தொண்டர்கள் மத்தியில் நடைபெற வேண்டும் என்று பொன்னையன் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய மாஃபா பாண்டியராஜனும், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது தவறு என்று கூறினார். மேலும் சசிகலா எடுத்த அனைத்து முடிவுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாக மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications