அமைச்சர் சி.வி. சண்முகம் வீடு திடீர் முற்றுகை.. கிரீன் வேஸ் சாலையில் பரபரப்பு
சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் சி.வி. சண்முகத்தின் வீட்டை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.
சென்னை: அடையாறு கிரீன் வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் சி.வி. சண்முகத்தின் வீட்டை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
சென்னை அடையாறு பகுதியில் உள்ள கிரீன் வேஸ் சாலை ஒரு விஐபி சாலை. இங்குதான் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வீடு முதல் அனைத்து அமைச்சர்களின் வீடுகளும் உள்ளன. அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் அணி சசிகலா அணி என இரண்டு அணிகள் பிரிந்த பின்னர் இந்த சாலையில் பரபரப்பிற்கு பஞ்சமில்லை.

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வீட்டின் முன்பு எப்போது அவரது ஆதரவாளர்கள் குவிந்து வண்ணம் உள்ளனர். வழக்கம் போல இன்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கு குவிந்திருந்தனர். அப்போது, ஓபிஎஸ் வீட்டிற்கு அருகில் இருக்கும் சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தின் வீட்டை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சர் பதவியை ஏற்க இருந்த நிலையில், சசிகலா ஆதரவாளரான சி.வி. சண்முகத்தின் வீட்டை, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திடீரென முற்றுகையிட்டு சசிகலா எதிர்ப்பு கோஷத்தை முழங்கினார்கள். இதனால் கிரீன் வேஸ் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications