ஆர்கே நகரில் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை சவப்பெட்டியில் எடுத்து சென்ற கோரம்!

ஆர்கே நகரில் பிரச்சார வேனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மையை சவப்பெட்டியில் வைத்து, ஒபிஎஸ் அணியினர் வீதிவீதியாக எடுத்துச் சென்றனர் இதனால் தினகரன் அணிக்கும் ஒபிஎஸ் அணிக்கும் இடையே கலவரம் உண்ட

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்கே நகர் தொகுதியில் ஜெயலலிதாவின் உருவபொம்மையை சவப்பெட்டியில் வைத்து ஒபிஎஸ் அணியினர் பிரச்சாரம் செய்தனர். இதற்கு அனைத்துத் தரப்பிலும் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது.

ஆர்கே நகரில் இடைதேர்தல் நடக்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் அணியினர், மறைந்து முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மையை சவப்பெட்டியில் பிரச்சார வேனின் முன்பகுதியில் வைத்து பிரச்சாரம் செய்தனர். அதில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஐசரி வேலன் மகள் அழகு தமிழ்ச்செல்வி ஆகியோர் இருந்தனர்.

OPS team canvassed with Jayalalitha's coffin box

ஜெயலலிதா உருவ பொம்மையை சவப்பெட்டியில் வைத்து வீதிவீதியாக எடுத்துச் சென்றது கட்சி சார்பு இல்லாதவர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது. இந்த பிரச்சாரத்தைக் கண்டு கோபமடைந்த தினகரன் அணியினர் தேர்தல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடினர்.

மேலும் இதுசம்பந்தமாக ஒபிஎஸ் அணியினருக்கும் தினகரன் அணியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் தினகரன் தரப்பு எம்.எல்.ஏவுக்கு மண்டை உடைந்து காயமடைந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+