தொப்பி போட்டுகிட்டு பணம் கொடுக்கிறது திமுகவும் ஒபிஎஸ் அணியும்...பழி எங்கள் மீதா?- 'அடடே' தினகரன்
ஆர்கே நகரில் திமுகவும் ஓபிஎஸ் அணியினரும் எங்கள் சின்னமான தொப்பியை அணிந்துகொண்டு, அவர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கின்றனர். ஆனால் நாங்கள் கொடுப்பதாக பழி எங்கள் மீது சுமத்தப்படுகிறது என கூறியுள்ளார்
சென்னை: திமுகவும் ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு தொப்பி அணிந்துகொண்டு பணம் கொடுத்து விட்டு, பழியை எங்கள் மீது சுமத்தி விடுகின்றனர் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஆர்கே நகரில் அதிமுக அம்மா அணி சார்பாக போட்டியிடும் டிடிவி தினகரன் அணியினர், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்து பலமுறை காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர். காமாட்சி விளக்குக் கொடுத்ததாக புகார் கொடுக்கப்பட்டு, 3 பேர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர். கருணாமூர்த்தி என்பவர் பணம் கொடுக்கும்போது பிடிபட்டார். மேலும் நேற்று சந்தானம் என்பவர் கைது செய்யப்பட்டார்.

ஆனால் டிடிவி தினகரனோ, வாக்காளர்களுக்கு நாங்கள் பணமோ, பொருளோ கொடுக்கவில்லை. திமுகவினரும், ஓபிஎஸ் அணியினரும் தொப்பி அணிந்து, வாக்காளர்களிடம் பணம் மற்றும் பரிசுப் பொருட்களக் கொடுக்கின்றனர். ஆனால், பழி எங்கள் மீது விழுகிறது.
அவர்கள் எண்ணம் ஆர்கே நகர் இடைதேர்தலை நிறுத்த வேண்டும் என்பதே. அப்படி ஒருவேளை நடந்தாலும், மீண்டும் நடக்கும் தேர்தலில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என டிடிவி தினகரன் நேற்று இரவு ஆர்கே நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது கூறியுள்ளார்.
ஆட்டோவில் நின்றபடியே தொப்பி சின்னத்துக்கு வாக்கு சேகரித்தபோது, அமைச்சர் தங்கமணி மற்றும் துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.
டிடிவி தினகரனின் அணியினர், பணப் பட்டுவாடா செய்யும்போது காவல்துறையில் சிக்கிக் கொண்டால், தினகரன் இவ்வாறு புலம்புவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications