ஜெ. சாவில் மர்மம்.. மதுரையில் உண்ணாவிரதம் இருக்கும் இடத்தில் ஓ.பி.எஸ் அணி ஆய்வு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை கோரி உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ள மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஓபிஎஸ் அணியினர் ஆய்வு நடத்தினர்.
மதுரை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை வேண்டும் என வலியுறுத்தி மதுரை பழங்காநத்தம் பகுதியில் உண்ணாவிரதம் இருக்க போவதாக முடிவு செய்யப்பட்ட இடத்தை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பார்வையிட்டனர்.
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் மற்றும் சசிகலா குடும்ப ஆட்சியை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்க போவதாக ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் அண்மையில் அறிவித்தனர்.

இதற்காக தமிழகம் முழுவதும் நான்கு இடங்களை தேர்வுசெய்தனர். அதில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தனர். பழங்காநத்தம் பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இன்று பார்வையிட்டனர்.
போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி தந்தாலும் தராவிட்டாலும் நாங்கள் இந்த இடத்தில் உண்ணாவிரதம் இருப்பது உறுதி என்றும், இந்த போராட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications