தமிழகத்தில் பிரச்சினை வெடிக்கலாம்... மத்திய உளவுத்துறை எச்சரிக்கை.. உஷார் நிலையில் போலீஸ்!
தமிழகத்தில் சசிகலா ஆதரவாளர்களால் பிரச்சினை வெடிக்கலாம் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் சசிகலா தரப்பினரால் பிரச்சினை அதிகமாகலாம் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து தமிழக காவல்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளதாம்.
சசிகலா தரப்பு நாளுக்கு நாள் படு வேகமாக பலவீனமடைந்து வருகிறது. அவர்களின் ஒவ்வொரு கதவும் மூடப்பட்டு வருகிறது. இதனால் சசிகலா தரப்பு விரக்தி அடைந்து வருகிறது. சசிகலாவே கூட நிதானம் தவறிப் பேச ஆரம்பித்துள்ளார். மிரட்டுவது போல பேச ஆரம்பித்துள்ளார்.

மேலும் தஞ்சை, மன்னார்குடியிலிருந்து பெருமளவில் இளைஞர்கள் கொண்டு வரப்பட்டு சென்னை முழுவதும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இவர்கள் சென்னையில் கலாட்டாவில் ஈடுபடலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதையடுத்து நேற்று சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள விடுதிகள், கல்யாண மண்டபங்கள் உள்ளிட்டவற்றில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.
இரவும் கூட விடிய விடிய சென்னை நகரிலும், நகரின் எல்லைப் பகுதிகளிலும் வாகனச் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கலாம் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதாம். இதையடுத்து போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சசிகலா ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளதாம்.
இதனால் சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தில் எங்கெல்லாம் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதோ அங்கெல்லாமும் கூட போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாம்.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்!












Click it and Unblock the Notifications