For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையிலிருந்து 118 படகுகளை விடுவிக்கக் கோரி.. மோடிக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம்

இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட 118 படகுகளை விடுவிக்கக் கோரி மோடிக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். மேலும், 51 மீனவர்களை விடுதலை செய்யப்பட்டதற்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார் ஓபிஎஸ்.

Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில், இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 51 பேரை விடுக்க எடுத்த முயற்சிகளுக்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஓபிஎஸ்.

OPS wrote letter to Modi

மேலும், 10 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்து இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 10 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர். ஆக, இலங்கை சிறையில் உள்ள 20 மீனவர்களை விடுவிக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர 118 படகுகளை இலங்கை அரசு சிறை பிடித்து வைத்துள்ளது. இவற்றை விடுவிக்கவும் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Chief Minister O.Panneerselvam wrote a thanks letter to Modi for releasing 51 fishermen from Sri Lanka prison.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X