குழந்தைகளுக்கு புடிச்ச சுவையான நாமக்கல் நிப்பட்டு!!
நாம் பலரும் விரும்பி உண்ணும் சைடு டிஷ்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, மொரு மொறுப்பான உணவு பண்டங்கள் தான். அதுவும் அந்த சைடு டிஷ் கார சாரமாக இருந்தால் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். மொரு மொறுப்பான உணவு வகைகள் என்ற பெயரை கேட்டாலே நமக்கு நினைவுக்கு வரும் முதல் சைடு டிஷ் முறுக்கு தான். அதையே மிஞ்சும் அளவிற்கு ஒரு சைடு டிஷ் இருக்கிறது என்றால் அது தான் இந்த நிப்பட்டு அல்லது தட்டை அல்லது தட்டை வடை.
நாமக்கல் நிப்பட்டு:
இந்த நிப்பட்டு, நன்கு சுவையோடும், மனமோடும், காரம் மிகுந்த தன்மையோடும் கிடைக்கும் ஒரே இடம் நம்ம நாமக்கலில் மட்டுமே. நாமக்கலில் வெறும் முட்டை மட்டும் பிரபலம் இல்லை, கலப்படம் இல்லாமல் தயாரிக்கப்படும் கார சாரமான நிப்பட்டும் கூட பிரபலம் தான்.
இவர்கள் இந்த நிப்பட்டு செய்யும் நுணுக்கத்தை ஒரு பாரம்பரிய கலையாக பாதுகாத்து வருகின்றன. இதில் சேர்க்கப்படும் பொருட்கள் அவர்களுது சொந்த நிலத்திலேயே பக்குவமாக விளயவைத்து, அறுவடை செய்து, அதை கொண்டு இந்த நிப்பட்டை செய்கின்றனர்.

இந்த நிப்பட்டை, உணவுக்கு சைடு டிஷ் ஆகவும், மாலை நேரங்களில் டீ, காபி போன்ற தேநீர் வகைகளுடனுடும் சாப்பிடலாம். வட மாநிலங்களில் இந்த நாமக்கல் நிப்பட்டை விரும்பி உண்பார்கள். சாட் கடைகளில் இந்த நிப்பட்டின் மீது வெங்காயம், தக்காளி வைத்து சாட்மசாலா தூவி விற்கப்படும்.
இந்த நாமக்கல் நிப்பட்டை செய்முறையை நாம் இப்பொழுது பார்ப்போம்:
தேவையான பொருட்கள் :
மைதா - 1 கப்
பொட்டுகடலை மாவு - 2 தேக்கரண்டி
பெருங்கயத்தூள் - 1 தேக்கரண்டி
கடலை மாவு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
அரைக்க தேவையான பொருட்கள்:
பச்சை மிளகாய் - 6 அல்லது 7
சீரகம் - 1 தேக்கரண்டி
கறுவேப்பிலை - 10 அல்லது 15
ஊற வைக்க தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
செய்முறை:
ஊற வைக்க வேண்டிய பொருட்கள், அதாவது கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை கலந்து ஒரு வானொலியில் சிறிதளவு தண்ணீரை ஊற்றி ஊற வைக்க வேண்டும்.
மைதாவை ஒரு இட்லி பானையில் போட்டு ஒரு மெல்லிசான துணியை போட்டு மூடிவிட்டு வேக விட வேண்டும். 8 முதல் 10 நிமிடம் வரை வேக வைக்கவேண்டும். 10 நிமிடம் கழித்து அதை ஆற விட வேண்டும்
மிக்ஸியில் அரைக்க வேண்டிய பொருட்கள், பச்சை மிளகாய், சீரகம், கருவேப்பில்லை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். ஆறவைத்த மைதா, மிக்ஸியில் அரைக்கப்பட்ட கலவை மற்றும் ஊறவைத்த பொருட்கள், எல்லாவற்றையும் கலந்து கொள்ளவும். சிறிது தண்ணீர் ஊற்றி கொண்டு நன்று பிசைத்து வைத்து கொள்ளவும்
ஒரு அடி கனமான பாத்திரத்தை எடுத்து கொண்டு அதில் பொறிப்பதற்கு தேவையான எண்ணையை ஊற்றி கொண்டு அதை அடுப்பில் வைத்து காய விட வேண்டும். அந்த கலவையை தட்டை மாதிரி கையில் தட்டி கொண்டு, அந்த எண்ணையில் போட்டு பொன் நிறமாக வருக்க வேண்டும்
பொறிப்பதற்கு தீ மிதமான சூட்டில் வைப்பது நல்லது. இப்பொழுது சூடான நாமக்கல் நிப்பட்டு அல்லது தட்டு வடை ரெடி !!! சூடு ஆறும் முன் கொத்தமல்லி சட்னியுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்
நாமக்கல் நிப்பட்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
இந்த கார சாரமான உணவு பண்டத்தை சாப்பிடுவதால் எலும்புக்கு சத்து கிடைக்கும், கை கால் வலி குறையும், ரத்த ஓட்டம் சீராகும் என பல வகையான நன்மைகள் உண்டு
இந்த நாமக்கல் நிப்பட்டை தயரிக்கவேண்டுமெனில், ஒரு தனி பதம் மற்றும் அந்த கலவை சரியாக வரும் வரை பொறுமையாக காத்திருக்கவேண்டும். ஆனால் இப்பொழுது இருக்கும் கால கட்டத்தில் அது முடியாது. அதற்க்கு பொறுமை இல்லாமல் பல தரப்பட்ட மக்கள் பல பேக்கரி கடைகளில் கிடைக்கும் தரமற்ற நிப்பட்களை வாங்கி சாப்பிடுவார்கள். இதனால் உடல் நலத்திற்கு பல வகையான நோய்கள் வரும்
ஆனால் நம் உடல் நலத்தையும், ஆரோக்யத்தையும் கணக்கில் கொண்டு நமக்கு தரமான முறையில் இந்த நாமக்கல் நிப்பட்டை தருவது நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) தான். அதுவும் இல்லாமல் நீங்கள் ஆச்சர்ய படும் அளவுக்கு, விலை கம்மியாக கிடைக்கும் ஒரு ஆன்லைன் நிறுவனம் நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) தாங்க.
நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) தான் மக்களின் உடல் ஆரோக்யத்தை கணக்கில் கொண்டு அவர்களுக்கு உணவு மற்றும் இனிப்பு பண்டங்கள் தயாரிக்கும் ஒரே நிறுவனம். நீங்க நேடிவ்கிருஷ்.காம்' ல் (www.nativcrush.com) ஆர்டர் செய்தால், உங்கள் வீடு தேடி வரும் இந்த ஆரோக்யமான உணவுப்பண்டம்
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பான தின்பண்டம் உண்டு, இப்போது இருக்கும் இந்த அவசர உலகில் நாம் அதை ஊர் ஊராக சென்று சுவைக்க முடியாது. பலருக்கு அது ஒரு கனவாகவே இருக்கிறது. நம்ம நேடிவ்கிருஷ்.காம் (www.nativcrush.com) இந்த கனவை நினைவாக்குகிறது.












Click it and Unblock the Notifications