பாஸ்போர்ட் நகலைக் கொண்டு வெளிநாடுகளுக்குச் செல்ல முடியுமா? - ஹைகோர்ட் நீதிபதி கேள்வி - வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: அசல் ஓட்டுநர் உரிமம் எடுத்துவர மறந்து வாகனம் ஓட்டுவதை குற்றமாக கருத முடியாது, மறந்துவிட்டு வருபவர்களுக்கு அபராதம் மட்டும் போதுமானது என்று ஹைகோர்ட் தலைமை நீதிபதி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பது செப்டம்பர் 6 முதல் கட்டாயமாகியுள்ளது. இவ்வாறு அசல் வாகன ஓட்டுநர் உரிமத்தை எடுத்து வராதவர்களுக்கு அதிகபட்சம் 3 மாதம் சிறை தண்டனை விக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Original driving licence case: Madras High Court CJ advise to gevernment

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்த போது அவர் சில கருத்துகளை முன் வைத்தார். பாஸ்போர்ட் நகலைக் கொண்டு வெளிநாடுகளுக்குச் செல்ல முடியுமா? அதேபோல் அசல் ஓட்டுநர் உரிமமும் அவசியம். நகல் பாஸ்ப்போர்ட்டை வைத்துக்கொண்டு வெளிநாடு செல்ல முடியாது. அதேநேரம், அசல் ஓட்டுநர் உரிமம் கொண்டுவர மறந்து வாகனம் ஓட்டுபவர்களை தவறாகக் கருத முடியாது.

ஓட்டுநர் உரிமம் இல்லாததற்கும், ஓட்டுநர் உரிமத்தை மறந்துவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கும் வித்தியாசம் உள்ளது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+