கடவுளே, நாங்க ஊருக்கு எப்படி போவோம்?: சென்னையில் சிக்கிய வெளியூர்க்காரர்கள் கவலை
சென்னை: வெள்ளத்தால் சென்னையில் பேருந்து, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
திங்கட்கிழமை இரவு முதல் பெய்த கனமழையால் சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்கள் மீண்டும் வெள்ளக்காடாகின. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மின்சார ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று 2வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள் வெள்ளத்தில் சிக்கி ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். கோயம்பேடு வரை சென்றால் பேருந்து கிடைக்கும் என்றாலும் இருக்கும் இடங்களில் இருந்து வெள்ளத்தில் எப்படி கோயம்பேடு போவது என்று வெளியூர்க்காரர்கள் கவலையில் உள்ளனர்.
#ChennaiRains: 7 ways you can help flood victims #IndiaTV https://t.co/EvTfWc4LIh pic.twitter.com/TSQ3bIxvgo
— India TV (@indiatvnews) December 2, 2015 கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு கிளம்பிய பேருந்துகள் பெருங்களத்தூர், செங்கல்பட்டு, மதுராந்தகத்தில் நீண்ட வரிசையில் நின்றதை காண முடிந்தது. சென்னையில் மாநகர பேருந்துகள் மிக குறைந்த அளவே இயக்கப்படுகின்றன.
#ChennaiFloods #chennairains @TimesNow state of it companies - two floors submerged, 600 people evacuated by boats. pic.twitter.com/k8EtKrYiHl
— Hari Sudhan (@HaRyblog) December 2, 2015 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் புறநகர் பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பேருந்துகளும், ரயில்களும் ஓடவில்லை என்றால் ஆட்டோக்களும் ஓடவில்லை. இதனால் மக்கள் செய்வது அறியாது திகைத்துள்ளனர்.
#chennairains #ChennaiFloods A site that has now become common in Chennai... pic.twitter.com/Z6hAFq3U5A
— Dhivya Soundari (@dhivya_soundari) December 2, 2015 











Click it and Unblock the Notifications