விவசாயி தற்கொலைக்கு தூண்டிய வங்கி அதிகாரி மீது கொலை வழக்கு.. பி.ஆர். பாண்டியன் ஆவேசம்
விவசாய சங்கத் தலைவரை கெட்டவார்த்தையில் பேசி அவமானப்படுத்தியதால் தற்கொலைக்கு தூண்டியதாக ஐஓபி வங்கி அதிகாரி மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் கோரியுள்ளார
சென்னை: நெல்லை மாவட்டத்தில் விவசாய சங்கத் தலைவர் வேம்புகிருஷ்ணன், ஐஓபி வங்கி அதிகாரி அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு விவசாயிகள் சங்கம் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பி.ஆர். பாண்டியன் கூறியதாவது:
மாநில அரசு வறட்சி பாதித்த இடமாக அறிவித்துவிட்டாலே மாவட்ட நிர்வாகம் மூலமாக அந்தந்த வங்கிகளில் கடன் வசூலை ஒத்தி வைக்க வேண்டும். அதற்கான சுற்றறிக்கைகளை ரிசர்வ் வங்கியும் மத்திய நிதி அமைச்சகமும் அனுப்ப வேண்டும் என்று 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம் சொல்கிறது.

அதனை பின்பற்ற தமிழக அரசும் மறுக்கிறது. அதனை ஏற்று செயல்படுத்த வங்கி அதிகாரிகளும் மறுக்கிறார்கள். வங்கி அதிகாரிகள் மிக மோசமான முறையில் கடன் வசூல் என்ற பெயரில் அநாகரிக நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். விவசாயிகளை அவமானப்படுத்துகிறார்கள்.
நெல்லை மானூரில் விவசாய சங்கத் தலைவர் வேம்புகிருஷ்ணனை அவமானப்படுத்திய ஐஓபி வங்கி அதிகாரி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். உடனடியாக அந்த அதிகாரி தண்டிக்கப்பட வேண்டும்.
ஆந்திர அரசை பின்பற்றி, அரசு தொகையில் இருந்து ஈடு செய்து விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லை என்றால் கடன் வசூல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.
இதுவரை 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நாளை சென்னை சேப்பாக்கம் அருகில் மரணம் அடைந்த விவசாயிகளின் புகைப்படங்களை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தி மத்திய அரசுக்கு கண்டன ஆர்ப்பாட்டம் செய்கிறோம். மாநில அரசும் எங்களது கோரிக்கை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறோம்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications