பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் முதியவர்கள் மர்ம மரணம்.. தமிழக அரசு, சிபிஐக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் முதியவர்கள் மர்ம மரணமடைந்தது குறித்த வழக்கில் தமிழக அரசும், சிபிஐயும் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பாலேஸ்வரம் புனித ஜோசப் கருணை இல்லத்தில் தங்கியிருக்கும் முதியவர்கள் இறந்த பின்னர் சட்டவிரோதமாக அவர்களது எலும்புகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இல்லத்தில் சேர்க்கப்படும் முதியவர்கள் 4 நாட்களுக்குள் மர்மமான முறையில் இறப்பதாகவும், நகராட்சியிடம் முறையான அனுமதி வாங்காமல் அவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படாமல் சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள அறைகளில் வைத்து பதப்படுத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் பாலேஸ்வரம் கருணை இல்லத்தை சேர்ந்த முதியவர்களின் உடல்கள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் கிடந்ததாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கல்யாணராமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாலேஸ்வரம் கருணை இல்லம் விவகாரம் தொடர்பாக தமிழக அரசும், சிபிஐயும் பதிலளிக்க வேண்டும் என்றும் ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசும், சிபிஐயும் 3 வாரத்தில் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டிஜிபி, உள்துறை செயலாளர் ஆகியோரும் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications