அப்ளிகேஷன் கொடுத்த அடுத்த 48 மணி நேரத்தில் உங்கள் கையில் “பான் கார்டு”... விரைவில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விண்ணப்பித்த 48 மணி நேரத்தில் நிரந்தர வருமான வரி கணக்கு எண் அட்டை அதாவது பான் கார்டு பெறும் வசதியை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

ஆன் லைன் மூலமாக இணையதளத்தில் விண்ணப்பித்த 48 மணி நேரத்தில், வருமான வரி கணக்கு எண் அட்டையைப் பெறலாம் என்று மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

அனைவரும் இந்த அட்டையைப் பெறும் வகையில், நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

PAN card to be issued within 48 hours of applying

வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கும், குறிப்பிட்ட தொகைக்கும் அதிகமான விலையில் அசையா சொத்துகள், வாகனங்கள் வாங்குவதற்கும் அல்லது விற்பதற்கும், வருமான வரி கணக்கு எண்ணைத் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.

ரூபாய் 1 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மதிப்புள்ள நகைகளை வாங்கும்போது வருமானவரி கணக்கு எண்ணைத் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+