பணப்பாக்கம் மாணவிகள் தற்கொலை: ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி விடுதலை சிறுத்தைகள் போராட்டம்
வேலூர்: அரக்கோணம் அருகே பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள பணப்பாக்கம் அரசுப்பள்ளி மாணவிகள் மோனிஷா, ரேவதி, தீபா, சங்கரி ஆகியோர் ஆசிரியைகள் திட்டியதால் மனமுடைந்து பள்ளி அருகே உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நான்கு தனிப்படைகள் அமைத்து பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடந்துவருகிறது. இந்நிலையில் முதற்கட்ட விசாரணையை அடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமாமணி, வகுப்பு ஆசிரியர் லலிதா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து பணப்பாக்கத்தில் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
இதில் மேல்விசாரணை கோரியும், மாணவிகளாஇ இழந்த குடும்பங்களுக்கு 25 லட்ச ரூபாய் வழங்கக்கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வலியுறுத்தி பணப்பாக்கத்தில் போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications