Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெல்லையில் பஞ்சாயத்து துணைத்தலைவர் வெட்டிக்கொலை: பதற்றம்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: பஞ்சாயத்து துணைத்தலைவர் பட்டப்பகலில் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் திருநெல்வேலியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம், மேலப்பட்டம் பஞ்சாயத்தின் துணைத் தலைவராக இருந்தவர் பாலமுருகன். இவரை, பாளையங்கோட்டை, சாந்திநகர் அருகே வழிமறித்த ஒரு மர்ம கும்பல், சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது

Panchayat vice president hacked by gang dies

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 10 மாதங்களாக சுமார் 100க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. இதில் பெரும்பாலான கொலைகள் சாதிகளை மையமாக வைத்து நடந்துள்ளன என்பது பொதுமக்கள், அரசியல் தலைவர்களின் குற்றச்சாட்டு. இந்த தொடர் கொலைகள் பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி இருக்கின்றன.

நெல்லை மாவட்டத்தில் சிறு சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் கொலை செய்யும் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.

இதுபோன்ற தொடர் கொலைகளால் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பதட்டம் நிலவியது. இதனையடுத்து இரு மாவட்டங்களிலும் காவல்துறை உயரதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். சாதி மோதல்கள் கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்களாக மீண்டும் அரிவாள் கலாச்சாரம் தலை தூக்க தொடங்கி உள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+