வெங்காயத்தை உறித்தால் என்ன வரும்... அதேதான் விஜயகாந்த்தும் - மனம் திறக்கும் 'பழைய வெங்காயம்'!
சமீபத்தில் பத்தி்ல் கூட அவருக்கு தமிழக அரசு அண்ணா விருது வழங்கிக் கெளரவித்தது. இதைப் பெற்றுக் கொண்ட உற்சாகத்தில், வரும் லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்காக பிரசாரம் செய்யப் போவதாகவும் கூறியுள்ளார் பண்ருட்டியார்.
தேர்தல் பிரசாரத்துக்கு நிறைய நேரம் இருப்பதால் தற்போதைக்கு சொந்த ஊருக்குப் போவது, சாமி கும்பிடுவது, உற்றார் உறவினர்களைச் சந்திப்பது, கல்யாண் காட்சிக்குப் போவது என்று ஹாயாக இருந்து வருகிறார் பண்ருட்டியார்.
அந்த வகையில், பண்ருட்டி அருகே உள்ள சாத்திப்பட்டு கிராமத்திற்குப் போன அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது விஜயகாந்த் குறித்தும் நிறையப் பேசினார். அவர் பேசுகையில், விஜயகாந்த்தை வெங்காயம் என்று மறைமுகமாக சாடினார்.
பண்ருட்டியார் கூறுகையில், கூட்டணி விவகாரத்தில் தொண்டர்களை மட்டுமின்றி பிற கட்சிகளையும் விஜயகாந்த் குழப்பி வருகிறார். உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மாநாடு மூலம் தொண்டர்களின் நல்லெண்ணத்தையும் அவர்கள் இழந்து விட்டனர்.
ஏதோ தேர்தலுக்காக திட்டம் வைத்திருப்பதாக கூறுகிறார் விஜயகாந்த். ஆனால், அவை வெங்காயத்தை உறித்த கதைதான். உள்ளே ஒன்றும் இருக்காது என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
வளர்த்த கதையைக் கூட மறந்து விடலாம்.. ஆனால் விஜயகாந்த்துடன் சேர்ந்து அதே வெங்காயத்தை தானும் உறித்த கதையை மறந்து விட்டாரே பண்ருட்டியார்...