மாநில அளவிலான கலை-இலக்கிய போட்டியில் பரமக்குடி மாணவருக்கு முதல் பரிசு
Subscribe to Oneindia Tamil
வேலூர்: தமிழக பள்ளிக் கல்வித் துறை நடத்திய மாநில அளவிலான கலை இலக்கியப் போட்டிகளில் பரமக்குடி கேஜேஇஎம் மேல்நிலைப் பள்ளி மாணவர் முதல் பரிசை தட்டிச் சென்றார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை நடத்திய மாநில அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் வேலூரில் நடைபெற்றது. மாநில அளவில் பல பள்ளிகளில் இருந்தும் வந்திருந்த மாணவர்கள் இடையே பல்வேறு வகையான இலக்கிய போட்டிகள் நடந்தன.
அதில் பேச்சுப்போட்டி பிரிவில்,பரமக்குடி KJEM மேல்நிலைப்பள்ளி மாணவன் எம்.நிதீஷ் முதலிடம் பிடித்தார்.இம்மாணவருக்கு தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீரமணி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
வெற்றி பெற்ற மாணவனை பள்ளித் தாளாளர் முகமது உமர் தலைமையாசிரியர் அஜ்மல்கான் சாரண ஆசிரியர் ஹிதாயத்துல்லா ஆகியோர் பாராட்டினர்.












Click it and Unblock the Notifications