ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக துணை ராணுவம் வருகை
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாதுகாப்புக்கு 5 கம்பெனி துணை ராணுவப் படையினர் இன்று தமிழகம் வருவதாக செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
தேர்தல் பாதுகாப்புக்கு கூடுதலாக 5 கம்பெனி ராணுவம் அடுத்த வாரம் வர உள்ளதாகவும், நவீன தொழில்நுட்பம் மூலம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கண்காணிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னெச்சரிக்கை நடடிக்கையாக பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 55 பேர் கைது செய்யப்படுள்ளதாகவும்,
இடைத்தேர்தலில் ரூ.28 லட்சம் வரை செலவு செய்ய வேட்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
காந்தியவாதி சசிபெருமாள் முறையாக பூர்த்தி செய்யாததால் அவரது வேட்பு மனுவை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தீப் சக்சேனா குறிப்பிட்டார்..
தேர்தல் பிரச்சாரத்திற்கு 164 நட்சத்திரப் பேச்சாளர்கள் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும் சந்தித்த சக்சேனா தெரிவித்துள்ளார்.