கேரளாவில் தீவிரவாத பயிற்சி அளித்த பறவை பாட்ஷா- போலீஸ் அதிர்ச்சி தகவல்
நெல்லை: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பறவை பாதுஷா கேரளாவில் தீவிரவாத பயிற்சி அளித்தாக சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக மூத்த தலைவர் அத்வானியை மதுரையில் கொல்ல முயற்சி, சேலம் ஆடிட்டர் ரமேஷ் வேலூர் இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன் படுகொலைகள் மற்றும் பெங்களுரு குண்டு வெடிப்பு ஆகிய முக்கிய வழக்குகளில் தேடப்பட்டு வந்த பறவை பாதுஷாவை கடந்த 22ம் தேதி கேரள மாநிலம் புனலூரில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே அவர் கேரள மாநிலத்தில் அவர் எங்கெங்கு பதுங்கியிருந்தார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பறவை பாதுஷா கடந்த 7 மாதங்களுக்கு முன் கொல்லம் மாவட்டம் அஞ்சல் என்ற இடத்துக்கு வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
அப்பகுதியை சேர்ந்த ஒரு மத போதகர் மற்றும் ஆட்டோ டிரைவர்
உதவியுடன் சந்தை முக்கு பகுதியில் உள்ள ஒரு ரைஸ்மில்லில் ஒன்றரை மாதம் வேலை பார்த்துள்ளார். பின்னர் அப்பகுதியை சேர்ந்த மது என்பவருடன் சேர்ந்து கொத்தனார் வேலையும் பார்த்துள்ளார். இரண்டு மாதங்கள் மட்டும் வேலை பார்த்த அவர் அது போரடிக்கவே அதை உதறிவிட்டு மாடுகளை வாங்கி விற்கும் தொழிலில் இறங்கியிருக்கிறார். இதில் மாட்டு வியாபாரி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரது உதவியுடன் ஷண்ணபேட்டை என்ற இடத்தில் ஒரு மட்டன் கடையில் வேலை பார்த்து உள்ளார். அங்கு வைத்து அவரை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் கொல்லம் மாவட்ட தனிப்பிரிவு டிஎஸ்பி விஜயகுமார் நடத்திய விசாரணையில், கொல்லம், கோழிக்கோடு, மணப்புரம், கண்ணூர், காசர்கோடு உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று அவர் இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்துள்ளார் இதற்கு 2 மத அமைப்புகள் அவருக்கு உதவி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அங்கு அவருக்கு அடைக்கலம் கொடுத்தது யார், உதவி செய்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications