பழனி: 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை
பழனி: பழனி அருகே மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு, பெற்றோர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகனுக்கு மாலைக்கண், மகள் மனநிலை பாதித்தவர், மற்றொரு மகள் மாற்றுத்திறனாளி என்பதால் மனமுடைந்து 3 பிள்ளைகளுடன் தம்பதி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
பழனி அருகே உள்ள கீரனூர் மார்கண்டேயபுரத்தை சேர்ந்த கந்தசாமி மகன் முருகேசன் (வயது50). விவசாயி. இவரது மனைவி கிருஷ்ணவேணி (40). இவர்களது குழந்தைகள் தேன்மொழி (18), வசந்தி (16), வசந்தகுமார் (14).

முருகேசன் தோட்டத்து வீட்டில் குடும்பத்தினருடன் தங்கி விவசாய வேலை பார்த்து வந்தார். முதல் மகள் தேன்மொழிக்கு மாலைக்கண் நோய் மற்றும் உடல் ஊனமுற்றவர். இதேபோல் மற்ற 2 குழந்தைகளும் மாற்றுத்திறனாளிகள். இவர்களால் நடந்து செல்ல முடியாது. 3 குழந்தைகளும் உடல் நலக்குறைவினால் அவதிப்பட்டு வந்ததால் மற்ற குழந்தைகளை போல் வெளியே சென்று விளையாட முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.
இதனால் முருகேசனும் அவரது மனைவியும் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்தனர். தமக்கு பிறகு குழந்தைகளின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்று வேதனை அடைந்துள்ளனர். இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்தனர். நேற்று இரவு குழந்தைகள் 3 பேருக்கும் விஷம் கொடுத்தனர். பின்னர் தாங்களும் அதனை குடித்தனர். தோட்டத்து வீடு என்பதால் அக்கம் பக்கம் யாரும் கிடையாது. இன்று காலையில் தோட்டத்து வேலைக்கு வந்தவர்கள் வீடு திறக்கப்படாமல் இருந்ததை கண்டு எட்டி பார்த்தனர். அப்போது அவர்கள் அனைவரும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அவர்கள் கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பழனி அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications