மீண்டும் திரளும் கருமேகக்கூட்டம்... பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர் கலக்கம்!
சென்னை: கிட்டத்தட்ட ஒரு மாதகாலத்திற்குப் பின் மீண்டும் இன்று சென்னையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், காலை முதலே வானம் மேகமூட்டமாகக் காணப்படுவதால் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர் மழை வந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
கனமழை, வெள்ளம் என பல்வேறு காரணங்களால் கடந்த 33 நாட்களாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. வெள்ளம் காரணமாக பலர் சென்னையை விட்டு வெளியேறி சொந்த ஊர் சென்றிருந்தனர்.

மீண்டும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அம்மக்கள் சென்னை திரும்பினர். வழக்கம்போல, இன்று பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்.
கடந்த ஒருவாரமாக சென்னையில் வெயில் அடித்து வருவதால் இனி மழை வராது என்ற நம்பிக்கையில் அவர்கள் இருந்தனர். ஆனால், இன்று காலை முதலே சென்னை புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டமாகக் காணப்படுகிறது.இதனால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
திடீரென கனமழை பிடித்து மீண்டும் வெள்ளம் வந்து விட்டால் என்ன செய்வது என்ற அச்சம் அவர்கள் மத்தியில் உள்ளது. கடந்த முறை வந்த வெள்ளம் தந்த பாதிப்பிலிருந்தே இன்னும் மீளாத மக்கள், இன்று வானம் மேகமூட்டமாக இருப்பதாக மேலும் பீதியடைந்துள்ளனர்.
பள்ளிகளுக்குச் சென்று பிள்ளைகளை அழைத்து வந்து விடலாமா என்றும் அவர்கள் யோசித்து வருகின்றனர். ஒருவேளை மழை பெய்து, வெள்ளம் வந்தால், பெற்றோர் வீடுகளிலும், குழந்தைகள் பள்ளிகளிலும் சிக்கிக் கொள்ளுமே என்ற பதட்டம் அவர்களிடம் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications