சாப்பாடு தரச் சென்றபோது மான் குத்தித் தாக்கியதில் பூங்கா ஊழியர் பலி
குமரி: தக்கலை அருகே உதயகிரிகோட்டை பூங்காவில் மான் கொம்பால் குத்தியதில் உணவு அளிக்கச் சென்ற ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உதயகிரிகோட்டையில் பூங்கா ஒன்று உள்ளது. இங்கு திறந்த வெளியில் கம்பி வேலிகள் அமைத்து மான்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பெரிய கொம்புகளுடன் உள்ள மான்கள் முதல் சிறிய மான்கள் வரை சுமார் 30-க்கும் மேற்பட்டவை இந்தப் பூங்காவில் வசித்து வருகின்றன.

கூடவே, இந்தப் பூங்காவில் பொழுதுபோக்கு அம்சத்துக்குரிய விளையாட்டு உபகரணங்களும் உள்ளதால், தினமும் இந்த பூங்காவிற்கு ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.
இங்குள்ள மான்களுக்கு உணவு தரும் வேலையை புலியூர்குறிச்சி ஆசான்கிணறு பகுதியை சேர்ந்த மாதவன் பிள்ளை (57) என்ற வனஊழியர் கவனித்து வந்தார்.
இவர் வழக்கம்போல், நேற்று காலையும் மான்களுக்கு உணவு அளிப்பதற்காக வேலிப்பகுதிக்குள் சென்றுள்ளார். மாதவன்பிள்ளை கை நிறைய இலை, தழைகளை உணவாகக் கொண்டு வருவதைப் பார்த்து மான்கள் கூட்டம் அவரை நோக்கி பாய்ந்து வந்தது.
அப்போது, பெரிய மான் ஒன்று, எதிர்பாராத நேரத்தில் மாதவன்பிள்ளையை வயிற்றில் குத்தியது. இதில் பலத்த காயமடைந்தார் மாதவன். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மற்ற ஊழியர்கள், அவரை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடனடியாக இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
உணவு அளிக்கச் சென்ற பூங்கா ஊழியர் மான் குத்தியதில் உயிரிழந்த சம்பவம், அங்கிருந்த மற்ற ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications