இளங்கோவன் பேச்சுக்கு தமிழக கட்சிகள் “சப்போர்ட்” செய்வது வேதனை தருகிறது - பொன்.ராதா
நாகர்கோவில்: தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட இளங்கோவன் பேச்சுக்கு ஆதரவு அளிப்பது வேதனை அளிக்கிறது என்று மத்திய பாஜக அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ''தமிழகத்தில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய விஜயகாந்த் கேட்டிருக்கிறார். அதை நான் வரவேற்கிறேன்.

தமிழகத்தில் நிதி நிலைமை சரியில்லை என்று கூறுகிறார்கள். நிதி நிலைமை சரியில்லாமல் ஆக்கியது யார்? ஓட்டு அரசியலுக்காக தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஆக்கப்பூர்வமான எந்த செயல்களும் செய்யப்படவில்லை. இலவசமாக ஓட்டுகளை வாங்கக்கூடிய செயல்களில் அரசு செயல்பட்டதால் நிதி நிலைமை மோசமாகியிருக்கிறது.
தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படவில்லை. வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு தொழிற்சாலைகள் வந்தாக வேண்டும். இதற்காக எந்த முயற்சியும் தமிழகத்தில் நடக்கவில்லை.
காங்கிரஸ் பாரம்பரியமிக்க குடும்பம் என்று பெருமையுடன் சொல்லி வருகிறார்கள். இளங்கோவனின் மோசமான பேச்சுக்கும் தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருப்பது வேதனை அளிக்கிறது''என்று கூறினார்.












Click it and Unblock the Notifications