தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி வைப்பதா, இல்லையா?: இளங்கோவன் விளக்கம்
சேலம்: தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி வைப்பதா, வேண்டாமா என்பது குறித்து இனி தான் முடிவு செய்யப்படும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கையில் கட்சிகள் கூட்டணி அமைக்கும் பணிகளை ஏற்கனவே துவங்கிவிட்டன. இந்நிலையில் கூட்டணி பற்றி தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சேலத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,
அதிமுக ஆட்சியில் லஞ்சம் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. மதுவால் தமிழக மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மதுவால் பல பெண்கள் விதவையாவது பற்றி எல்லாம் அதிமுக அரசுக்கு கவலை இல்லை.
மக்களை பற்றி கவலைப்படாத அதிமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் தோல்வியை அளிப்பார்கள். ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் தற்கொலைக்கு காரணமான அமைச்சர்களை பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
டெல்லியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பல விஷயங்கள் பற்றி பேசினோம். தமிழகத்தில் கூட்டணி வைப்பதா, வேண்டாமா என்று இனி தான் கட்சி முடிவு செய்யும் என்றார்.












Click it and Unblock the Notifications