அதிமுகவில் இணைந்த ஆன்மீகப் "பசி" சத்யா !
சென்னை: பசி சத்யா அதிமுகவில் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகைகள் பட்டியலில் சத்யாவுக்கும் தனி இடம் உண்டு. நடிப்பில் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொண்டு வலம் வந்தவர் சத்யா.
சென்னை பாஷையில் இவர் நடித்த படங்கள் எல்லாமே இவரது கேரக்டர் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர் சத்யா. பசி படம்தான் இவரை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
1979ம் ஆண்டு வெளியான பசி படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. அந்தப் படத்திற்குப் பிறகு பசி சத்யா என்று அழைக்ப்பட்டார். தொடர்ந்து வீடு, மறுபடியும், மறுபக்கம், டூயட் என 120க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பாலு மகேந்திராவின் படங்கள் இவருக்கு தனி மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்தன.

பசி சத்யா
இன்றைய இளைய தலைமுறை நடிகர்களின் படங்களில் நடித்வதர் பசி சத்யா. விஜய்யுடன் சில படங்களில் நடித்துள்ளார். அதிலும் பிரண்ட்ஸ், திருமலை, ஷாஜகான் உள்ளிட்ட படங்களில் பசி சத்யா சின்ன ரோல்களில் வந்திருந்தாலும் பேசப்பட்டார். காரணம் அவரது நடிப்பு.

சித்தியில் சத்யா
நடிகை ராதிகாவின் சித்தி நாடகத்தில் இவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. பசி சத்யா என்று அழைத்த அவரை அதன் பின்னர் சித்தி சத்யா என்று கூட அழைத்தனர். அந்த அளவுக்கு அவரது கேரக்டர் அப்போது பேசப்பட்டது.

சினிமா டூ சின்னத்திரை
இளவரசி, செல்லமே, கல்யாண பரிசு என்று மேலும் சில சீரியல்களில் நடித்துள்ளார் சத்யா. கனா காணும் காலங்கள் சீரியலிலும் அவரது நடிப்பு பேசப்பட்டது. பசி சத்யாவுக்கு கடந்த ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் நடிப்பைக் குறைத்துக் கொண்டார்.

ஆன்மீக தரிசனம்
சத்யாவுக்கு நடிப்பு போக இன்னொரு பசி உண்டு. அது ஆன்மீகப் பசி.. ஆன்மீகம் குறித்தும், வழிபாடுகள், கோவில்கள் குறித்துக் கேட்டால் மணிக்கணக்கில் பேசுவார். அத்தனை தகவல்களை அவர் தன்னகத்தே வைத்துள்ளார். அதிமுகவில் பசி சத்யாவை ஜெயலலிதா எப்படிப் பயன்படுத்தப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications