சாத்தூர் பேருந்து துப்பாக்கிச் சூடு: பழிக்குப் பழியாக இளைஞர் கொலை #Murder

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: சாத்தூர் அருகே அரசுப்பேருந்தில் இளைஞர் கருப்பசாமி முன்விரோதத்தில் முன் விரோதத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் விருதுநகர் மாவட்ட எஸ்.பி ஆய்வு செய்து விசாரணை நடத்தியுள்ளார்.

இளைஞர் கருப்பசாமியின் சகோதரர்கள் மந்திரமூர்த்தி, கனகராஜ் ஆகியோர் கொலை வழக்கில் சிறையில் உள்ளனர். கொலை வழக்கில் பழிக்குப் பழியாக கருப்பசாமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு பேருந்தில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Passenger Shot Dead in Sathur, Gunmen Escape

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசுப்பேருந்து சாத்தூரில் வந்த போது கோவில்பட்டியை சேர்ந்த கருப்பசாமியை இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிவிட்டனர். இதில் கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தப்பி ஓடிய இருவரை, சாத்தூர் போலீசார் விரைந்து ஓடிச் சென்று பிடிக்க முயற்சி செய்தனர். இருப்பினும் போலீசார் அந்த இருவரை இன்னும் பிடிக்கவில்லை.

கருப்பசாமியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை இருவரும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்திருக்கலாம் என தகவல்கள் வெளியானது. சம்பவ இடத்திற்கு வந்த விருதுநகர் மாவட்ட எஸ்.பி ஆய்வு மேற்கொண்டார். தப்பியோடிய 2 பேர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்புலன்ஸ் மூலம் கருப்புசாமியின் உடலை பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனிடையே இளைஞர் சுட்டுக்கொலை செய்யப்பட்டது முன்விரோதத்தில் நடந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இளைஞர் கருப்பசாமியின் சகோதரர்கள் மந்திரமூர்த்தி, கனகராஜ் ஆகியோர் கொலை வழக்கில் சிறையில் உள்ளனர். கொலை வழக்கில் பழிக்குப் பழியாக கருப்பசாமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருப்பசாமி கோவையில் வேலை செய்து வருகிறார். விடுமுறைக்காக சொந்த ஊர் வந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கருப்பாசாமிக்கு மனைவியும், 2வயது குழந்தையும் உள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர், பேருந்தில் துப்பாக்கியால் சுட்ட சத்தம் கேட்டது. பேருந்து நின்றது. உடனே இருவர் இறங்கி ஓடினர் என்று கூறினார். சாத்தூரில் அரசு பேருந்தில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+