ஆபரேசன் செய்யும் போது அரெட்ஸ் ஆன ஹார்ட்... போராடி காப்பாற்றிய அரசு டாக்டர்கள்
சென்னை: பைபாஸ் ஆபரேசன் செய்யும் நேரத்தில் இதயத்துடிப்பு நின்று போனால் எப்படி இருக்கும்? அப்படி மாரடைப்பால் நின்று விட்ட இதய துடிப்பை, ஒரு மணி நேரம் போராடி துடிக்க வைத்துள்ளனர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள்.
50 வயதான நோயாளி ஒருவர், நெஞ்சுவலி சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய ரத்த நாளத்தில் அடைப்பு நோய் கண்டறியப்பட்டது.

அறுவை சிகிச்சை நாளில், சிகிச்சை தொடங்கும் முன்பே, நோயாளியின் இதயத்துடிப்பு நின்று விட்டது. ஆனாலும் மயக்கவியல் மருத்துவர்கள் மற்றும் இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒரு மணி நேரத்திற்குமேல் போராடி நோயாளியின் இதயத்தை துடிக்கவைத்தனர்.அதன்பின் பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.
மருத்துவர்களும், செவிலியர்களும் அளித்த தீவிர சிகிச்சையால் நோயாளி தேறி, இதய நோய் குணமாகி நலமடைந்தார். மருத்துவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
தனியார் மருத்துவமனையில் இதுபோன்ற சிகிச்சை அளிக்க பல லட்சம் ரூபாய் செலவாகும். ஆனால் அரசு மருத்துவமனையில்
நோயாளியின் அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் முற்றிலும் இலவசமாக அளிக்கப்பட்டது.
இதற்கு தேவையான உபகரணங்களும் வசதிகளும், மருத்துவமனையின் முதல்வர் மற்றும் துறைத்தலைவரால் அளிக்கப்பட்டன.
இதயத்தின் முக்கிய அறையான இடது வென்ட்ரிகிளுக்கு தேவையான ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டால் திடீரென இதயத்துடிப்பு நின்று உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
ஆஞ்சியோ கிராம் சோதனையில் 5.7 சதவீதம் இந்த நோய் கண்டறியப்படும். இந்த நோய்க்கு முக்கிய சிகிச்சை பைபாஸ் அறுவை சிகிச்சை ஆகும். அறுவை சிகிச்சையால் இந்த நோய் குணமாவதுடன் திடீர் மரண அபாயமும் தவிர்க்கப்படும்.
மருத்துவர்களும், செவிலியர்களும் மற்ற பணியாளர்களும் ஒருமித்து தீவிர சிகிச்சை அளித்ததால் வெகு நேரம் இதயத்துடிப்பு இல்லாதிருந்த நோயாளி உயிருடன் மீட்கப்பட்டார். அதற்கான வசதிகள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் போதுமான அளவில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications