Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை... லோக்சபா தேர்தலைப் பாதிக்குமோ...கலக்கத்தில் காங்.. ப.சி. போடும் கூட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை விவகாரம் லோக்சபா தேர்தலின்போது தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று காங்கிரஸ் சந்தேகப்படுகிறதாம். இதனால் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தைக் களத்தில் இறக்கி விட்டுள்ளது காங்கிரஸ்.

இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் தொடர்ந்து கடும் எதிர்ப்பு இருந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்த முறை அது கூடுதலாகியுள்ளது. குறிப்பாக காமன்வெல்த் மாநாடு தொடர்பாக காங்கிரஸ் போட்ட இரட்டை வேடத்தை தமிழ் மக்களே ரசிக்கவில்லை.

பிரதமர் போகவில்லை..

பிரதமர் போகவில்லை..

இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் போகக் கூடாது என்று முதலில் கோரிக்கைகள் இருந்தன. இதை ஏற்று பிரதமரும் கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிக் கொண்டு போகவில்லை.

ஆனால் குர்ஷித் போய் விட்டாரே

ஆனால் குர்ஷித் போய் விட்டாரே

ஆனால் இலங்கையை சமாளிக்கும் வகையில் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை நைஸாக அங்கு அனுப்பி வைத்தது காங்கிரஸ்.

குர்ஷித் பேசிய பேச்சுக்களால் கொந்தளிப்பு

குர்ஷித் பேசிய பேச்சுக்களால் கொந்தளிப்பு

குர்ஷித்தோ, அடுத்தடுத்து தான் இலங்கை போவதன் நியாயத்தை வலியுறுத்தி ஆணி்த்தரமாகவும், தமிழகத்தின் எதிர்ப்புகள் தவறு என்பது போலவும் பேசப் போக அது மேலும் கொதிப்பையே அதிகரித்தது.

சட்டசபைத் தீர்மானம் குப்பையில்

சட்டசபைத் தீர்மானம் குப்பையில்

அதை விட முக்கியமாக தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தில் இலங்கைக்கு இந்தியாவிலிருந்து யாரும் போகக் கூடாது என்று ஒரு மனதாக தீர்மானம் போடப்பட்டது. அதையும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.

காங்கிரஸ் புறக்கணிப்பால் மேலும் கொதிப்பு

காங்கிரஸ் புறக்கணிப்பால் மேலும் கொதிப்பு

மேலும் இந்த தீர்மானத்தின் வி்வாதத்தையும், வாக்கெடுப்பையும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் புறக்கணித்த செயல் மேலும் எரிச்சலையே ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் வருகிறதே

தேர்தல் வருகிறதே

இந்த நிலையில், லோக்சபா தேர்தல் வரவுள்ளதால், இலங்கை விவகாரம் தமிழகத்தில் தனது காலை வாரி விடலாம் என காங்கிரஸ் இப்போது பயப்படுகிறதாம்.

விளக்கக் கூட்டம்

விளக்கக் கூட்டம்

இதையடுத்து மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இலங்கை விவகாரம் குறித்து விளக்குவதற்காக அறிவுஜீவிகள், பத்திரிகையாளர்கள், கட்சி சார்பற்ற பிரமுகர்கள் கலந்துகொள்ளும் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்லியிருக்கிறாராம். சென்னையில் இந்த மாதம் 30-ம் தேதி இந்தக் கூட்டம் நடக்க இருக்கிறது.

விலாவாரியாக விளக்கப் போகிறார்

விலாவாரியாக விளக்கப் போகிறார்

இலங்கை விவகாரம், இந்தியாவின் உதவிகள், போர், காமன்வெல்த், சீனாவின் அச்சுறுத்தல் என காங்கிரஸ் கண்கொண்டு விளக்குவாராம்.

எடுபடுமா

எடுபடுமா

ஆனால் தேர்தலை மனதில் கொண்டு காங்கிரஸ் எடுத்துள்ள இந்த நடவடிக்கைகள் தமிழக மக்கள் மத்தியில் எடுபடுமா என்பதை தேர்தல் முடிவுகளின்போதுதான் தெரிந்து கொள்ள முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+