சில மக்கள் தங்கள் மனசாட்சியை பிசாசிடம் விற்றுவிட்டனர் - தயாநிதிமாறன்
சென்னை: தமிழகத்திலுள்ள சில மக்கள் தங்கள் மனசாட்சியை பிசாசிடம் விற்றுவிட்டனர் என்று தயாநிதிமாறன் கூறியுள்ளார்
திமுக-தான் வெற்றி பெற்றி பெற்றிருக்க வேண்டும், மக்கள் தீர்ப்பு திமுக-வுக்குச் சாதகமாகவே அமைந்துள்ளது, ஆனால் பணநாயகத்தினால் அதிமுக வெற்றி பெற்றது' என்று தயாநிதிமாறன் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. திமுகவை விட அதிமுகதான் அதிக அளவில் முன்னணியில் உள்ளது. திமுக வலுவான எதிர்கட்சியாக உள்ளது. தேர்தல் முடிவுகள் பற்றி கருத்து கூறிய திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்,
"இந்தத் தேர்தலில் திமுகதான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதிமுக-வின் பணநாயகம் கடைசியில் வெற்றியை தீர்மானித்துள்ளது என்று கூறினார்.
வாக்குக்கு பணம் அளிக்கும் ஆளும் கட்சியின் நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதில் தேர்தல் ஆணையம் தோல்வியடைந்ததால் இதுவரை இல்லாத அளவுக்கு நெருக்கமான வெற்றியைப் பெற்றுள்ளது.
கோடிக்கணக்கில் பணம் செலவிட்ட #ஜெயலலிதா - #தயாநிதிமாறன் -ஒட்டகத்துக்கு முதுகு கோணல் என்றதாம் ஓணான் pic.twitter.com/WSyLnbJJcb
— ராதா இல்லாபடம் சாதா! (@RATHA_RADHA) May 19, 2016
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் திமுக வெற்றி பெறும் என்று கூறியதால் ஆளும் கட்சியினர் அதிக பணம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது" என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகத்திலுள்ள சில மக்கள் தங்கள் மனசாட்சியை பிசாசிடம் விற்றுவிட்டனர் என்று தயாநிதிமாறன் கூறியுள்ளது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
தேர்தலில் பணனாயகம் விளையாடிவிட்டது! - தயாநிதி மாறன்
— ANGRYஅசோக் (@Corp_Tshirt) May 19, 2016
அப்போ நிக்க ஜெயிச்ச 90+ தொகுதியிலும்மா?#TNElectionResults
அப்போ திமுக 90 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றது எப்படி என்று பலரும் கேட்டு வருகின்றனர். தயாநிதி மாறனின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications