காவிரி- தேவையில்லாமல் அரசியல் செய்பவர்கள் யார் என்று மக்களுக்குத் தெரியும் - சொல்வது செல்லூர் ராஜூ
காவிரி விவகாரத்தில் தேவையில்லாமல் அரசியல் செய்பவர்கள் யார் என்று மக்களுக்குத் தெரியும் என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை : காவிரி விவகாரத்தில் நாங்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். இந்த விவகாரத்தில் அரசியல் செய்பவர்கள் யார் என்று மக்களுக்கு நன்கு தெரியும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை விளாங்குடியில் ரூ 42 லட்ச ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்து உரையாற்றினார்.

அப்போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு தமிழகத்தின் உரிமைகளை கொஞ்சமும் விட்டுக்கொடுக்காமல் போராடி வருகிறது. மக்களின் தேவைக்காக சிறப்பான திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வரும் இந்த அரசுக்கு மக்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவை வழங்கி வருகிறார்கள். ஆனால் சிலர் இந்தப் பெருமைகளை சிதைக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்கள்.
காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழகம் சார்பில், மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆட்சியில் இருந்த போது எதையும் செய்யாத திமுக தற்போது அரசியல் லாபத்துக்காக கபட நாடகம் ஆடிவருகிறார்கள்.
திமுகவின் துரோகத்தை மக்கள் நன்கு அறிவார்கள். இந்த விவகாரத்தை அரசியல் ஆக்கி வருபவர்களையும் அவர்கள் அறிவார்கள். எனவே தேவை இல்லாமல் மக்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications