கச்சநத்தம் படுகொலை.. ஊர்மக்கள் 2-ம் நாளாக ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்.. மறியல்!
கச்சநத்தம் படுகொலையை கண்டித்து இன்றும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video

சிவகங்கை: கச்சநத்தத்தில் கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட சாதி மோதலில் 2 பேர் வெட்டி கொல்லப்பட்டதைக் கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஊர்மக்கள் 2வது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கச்சநத்தம் மற்றும் ஆவரங்காடு கிராமங்களில் வசித்து வரும் இருவேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். கச்சநத்தம் கிராமத்தில் வசித்துவரும் சமூகத்தினர் மீது ஆவரங்காட்டில் வசிக்கும் வேறு ஒரு சமூகத்தினர் எப்போதும் தாக்குதல் நடத்துவதையே வழக்கமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் கோவில் திருவிழா நடைபெற்றபோது, இரு சமூகத்தினரிடையே மோதல் வெடித்தது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களுடன் கச்சநத்தம் கிராம மக்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் ஆறுமுகம் மற்றும் மருது என்ற சண்முகநாதன் ஆகியோர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தனர். இதையடுத்து, ஆதிக்க சமூக குற்றவாளிகளை அரசு உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரி கச்சநத்தம் கிராம மக்கள் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் தொடர்ச்சியாக இன்றும் அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பங்களுக்கும் தலா 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வேண்டும் எனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க கோரியும் அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.
காத்திருப்பு போராட்டத்திற்கு முன்னதாக, ஊர்மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications