திருவாரூர் : குடிநீர் கேட்டு குளத்தில் இறங்கி பொதுமக்கள் நூதன போராட்டம்

திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் கிராம மக்கள் குடிநீர் கேட்டு குளத்தில் இறங்கி நூதன முறையில் போராடி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பெருகவாழ்ந்தான் கிராம மக்கள் குடிநீர் வழங்கக்கோரி குளத்தில் இறங்கி நூதன முறையில் போராடி வருகின்றனர்.

பெருகவாழ்ந்தான் கிராம மக்கள் சுமார் 200 பேர், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து அங்குள்ள குளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
பெருகவாழ்ந்தானில் உப்புத்தன்மை மிகுந்த குடிநீர் வழங்குவதால் மக்கள் சிறுநீரக பாதிப்புக்கு ஆளானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் குடிநீருக்கான மாற்று திட்டம் செயல்படுத்தப்படும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ், 2 மாதம் முன்பு உறுதியளித்துள்ளார்.

People protest against water shortage in Thiruvarur

இந்நிலையில் வழக்கமாக விநியோகிக்கப்பட்ட குடிநீரும் ஒரு மாதமாக வராததை கண்டித்து நேற்று மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் குடிநீர் வழங்குவதாக உறுதியளித்தும் நடவடிக்கை இல்லாததால் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் வந்து உறுதியளிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+