For Quick Alerts
For Daily Alerts
Just In
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி : தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து கன்னியாகுமரி கல்குளம் பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெல்ர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில், போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இதில் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கன்னியகுமரி மாவட்டம் கல்குளத்தில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கிறிஸ்தவ, இஸ்லாமிய மற்றும் தலித் கூட்டமைப்பு சார்பில் கல்குளம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
Comments
English summary
People protest condemning firing at Thoothukudi. Earlier police made firing on Public at Sterlite protest and killed 13 people.
Story first published: Sunday, June 3, 2018, 17:48 [IST]