அசிங்கப்படுத்திட்டாங்களே.. அரசு பஸ்சை எடைக்கு போட்டு பேரீச்சம் பழம் கொடுத்த பொதுமக்கள்- வீடியோ
கோவை: தமிழக அரசு பஸ்களின் பரிதாப நிலை எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் கோவை-பாலக்காடு சாலையிலுள்ள திருமலையாம்பாளையம் கிராம மக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து பேரீச்சம் பழத்திற்கு எடைக்கு போட்டு போராட்டம் நடத்தி, நிலவரத்தை சந்தி சிரிக்க செய்துவிட்டனர்.
3எஸ் என்ற டவுன் பஸ் ஒன்றை சிறை பிடித்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், பஸ் முன்னால் தராசுவை வைத்து பஸ்சை, எடைக்கு எடுத்துக்கொண்டதுபோல நடித்து காண்பித்து, பிறகு, பொதுமக்களுக்கு பேரீச்சம்பழங்களை வினியோகம் செய்தனர்.
மாட்டு வண்டியைவிட வேகம் குறைவாக பஸ்கள் இயங்குவதாகவும், ஒரு வேகத்தடையில் கூட ஏற முடியாத நிலையில் அந்த பஸ்கள் தகர டப்பா போல காட்சியளிப்பதாகவும் போராட்டக்காரர்கள் கேலி செய்தனர்.
போக்குவரத்து அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.