தண்ணீர் கொடுங்க கலெக்டரே... முற்றுகைப் போராட்டம் நடத்திய மக்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடியில், குடிநீர் கேட்டு கோரம்பள்ளம் பகுதி மக்கள் காலிகுடங்களுடன் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அருகே அமைந்துள்ள கோரம்பள்ளத்தில் பலஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இப்பகுதியை சேர்ந்த பெண்கள் குடும்பத்தலைவி ராஜாத்தி தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு காலி குடங்களுடன் திரண்டு வந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தங்கள் பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிப்பதற்கு குடிநீர் விநியோகம் முறையாக செய்யப்படவில்லை. பஞ்சாயத்து சார்பில் வழங்கப்படும் தண்ணீரானது உவர்ப்பு நீராக உள்ளது. எங்கள் ஊர் வழியாக தூத்துக்குடி கொண்டு செல்லும் குடிநீர் குழாய் கசிவுகளில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தோம்.
தற்போது அதனையும் அடைத்துவிட்டனர். எனவே குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டுவரும் எங்களுக்கு தட்டுப்பாடு இன்றி சீராக குடிநீர் வழங்கவேண்டும் என்று கோரி மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications