லாட்ஜில் ரூம் ஃபுல்.. ராமேஸ்வரம் பிளாட்பார்ம்களில் படுத்து தூங்கி அஞ்சலி செலுத்திய மக்கள்
ராமேஸ்வரம்: மக்களின் ஜனாதிபதி, இந்தியாவின் முன்னாள் முதல் குடிமகன், முப்படைகளின் முன்னாள் தலைவர், இளைஞர்களின் எழுச்சி நாயகன், அப்துல் கலாம் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதில் இருந்தும் வந்து ராமேஸ்வரத்தில் வந்து குவிந்த மக்கள், ஹோட்டல்களில் அறை கிடைக்காமல், பஸ், ரயில் நிலையங்களில் படுத்து தூங்கி எழுந்து அஞ்சலி செலுத்தினர்.
அப்துல் கலாமின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்த்துவிட வேண்டும், அந்த நாயகனின் காலடியில் தங்கள் கண்ணீரை சேர்த்துவிட வேண்டும் என்ற தீராத ஏக்கத்தால், மாநிலம் முழுவதிலும் இருந்தும் மக்கள் வெள்ளம், வெள்ளமாக ராமேஸ்வரத்துக்கு வந்தனர். நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை பல தரப்பட்ட மக்களையும், அப்துல் கலாம் என்ற ஒரு தாரக மந்திரம் இணைத்து அழைத்து வந்திருந்தது.

தமிழக அரசு இன்று விடுமுறை அறிவித்திருந்ததும், திருச்சி, மதுரையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளும், மக்களை ராமேஸ்வரம் கொண்டு வந்து சேர்க்க உதவியது. ஆனால் ராமேஸ்வரம் மிகச்சிறிய ஒரு தீவுப்பகுதி என்பதால், கடல்போல வந்த மக்களை தாங்க முடியாமல் நகரமே குலுங்கியது.
ராமேஸ்வரம், ஆன்மீக தலம் என்பதால், அங்கு வருடம் முழுவதும் பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதற்காக அங்கு, நூற்றுக்கணக்கான தங்கும் விடுதிகள் உள்ளன. ஆயினும், கலாமுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த மக்களுக்கு ஹோட்டல், தங்கும் விடுதிகளில் அறைகள் கிடைக்கவில்லை.
நேற்று முதல் ராமேஸ்வரத்தில் மக்கள் குவிந்து கொண்டிருந்தனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குவிந்ததிருந்தனர். தங்கும் விடுதி கிடைக்கவில்லை என்பதற்காக அவர்கள் திரும்பி செல்லவில்லை. பஸ் நிலையங்கள், ரயில் நிலையம், பிளாட்பார்ம்களில் படுத்து எழுந்து இன்று கலாமுக்கு அஞ்சலி செலுத்தினர். பணக்காரர், ஏழை, ஜாதி, அரசியல் வேறுபாடின்றி, அனைவருக்கும் பிளாட்பார்ம்களில் படுத்து தூங்கியதை பார்க்க முடிந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications