பேரறிவாளனுக்கு சிறுநீரக நோய் தொற்று சிசிச்சை - சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதி
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன், சென்னை அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருந்து வரும் பேரறிவாளன் சிறுநீரகத் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக இன்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், கடந்த சில மாதங்களாக சிறுநீரகத் தொற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

இதனால் அவ்வப்போது வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மற்றும் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
எனினும் அவருக்கு மேல் சிகிச்சை தேவை என அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தனர். இதனால் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டுமென பேரறிவாளன் மனு அளித்திருந்தார்.
இதனை ஏற்ற சிறைத்துறை அலுவலகம், பேரறிவாளனை சென்னை புழல் சிறைக்கு மாற்ற உத்தரவிட்டது.
அதனடிப்படையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி வேலூரிலிருந்து சென்னை புழல்சிறைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அவருக்கு மீண்டும் சிறுநீரகத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை அழைத்து வரப்பட்ட பேரறிவாளன், அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications