2 பெண் போலீஸ் அதிகாரிகளுக்கு வாட்ஸ் ஆப்பில் மிரட்டல்.. ரவுடி புல்லட் நாகராஜன் கைது
Recommended Video

தேனி: எந்த கொம்பனாலும் என்னை பிடிக்க முடியாது என உதார் விட்ட புல்லட் நாகராஜன் கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் புல்லட் நாகராஜன். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வழிபறி என ஏராளமான வழக்குகள் உள்ளன. இவர் மீது 1996-ஆம் ஆண்டு முதல் 71 வழக்குகள் இருந்தன. அவை அனைத்துக்கும் இவருக்கு சிறை தண்டனை கொடுக்கப்பட்டு விட்டது.
தனது மனைவியையே கொலை செய்த வழக்கில் புல்லட் நாகராஜனின் அண்ணன் ரமேஷ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த பெண் மருத்துவரிடம் தூக்க மாத்திரை கேட்டு அவர் கொடுக்காததால் தனது சட்டை கிழற்றி அவர் மேல் எறிந்தார்.

புல்லட்டிடம் தகவல்
இதையடுத்து சிறைத் துறை கமாண்டோக்களை அனுப்பி புல்லட்டின் சகோதரரை சிறை துறை எஸ்பி ஊர்மிளா "சிறப்பாக கவனித்ததாக" கூறப்படுகிறது. இதனிடையே நன்னடத்தையின் கீழ் வெளியே வந்த அண்ணன், தன்னை எஸ்பி அடித்தது குறித்து புல்லட்டிடம் கூறினார்.

தாக்கிய மதனகலா
இதனால் பொங்கிய புல்லட் நாகராஜன் வாட்ஸ் ஆப் மூலம் ஆடியோவில் மதுரை எஸ்பி ஊர்மிளாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். அவர் மீது லாரி ஏறும் என்னும் அளவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இந்நிலையில் ஜெயமங்கலத்தில் கைதிகளை தென்கரை இன்ஸ்பெக்டர் மதனகலா அடித்ததாக கூறப்படுகிறது.

மிரட்டல்
இதையடுத்து மதனகலாவுக்கு போன் போட்ட புல்லட் நாகராஜன், காக்கி சட்டை போட்டா விஜயசாந்தினு நெனப்பா, எனக்கு கோபம் வந்தால் மிருகம் போல் வேட்டையாடிடுவேன் என்றும் பின்னர் ஈ மொய்த்தபடி அனாதையாக சாகாதீர் என்றும் கொலை மிரட்டல் விடுத்தார்.

கைது
தொடர்ந்து இரு காவல் துறை அதிகாரிகளை புல்லட் நாகராஜன் மிரட்டியதை அடுத்து அவரை பிடிக்க 7 தனிப்படைகள் தேனி விரைந்தனர். இந்நிலையில் தென்கரை பகுதியில் சென்று கொண்டிருந்த புல்லட் நாகராஜனை பெரியகுளம் போலீஸார் பார்த்துவிட்டு விரட்டினர். இவர்களை பார்த்து ஓடிய புல்லட்டை பெரியகுளம் டிஎஸ்பி ஆறுமுகம் இரு சக்கர வாகனத்தில் விரட்டி சென்று பிடித்தார். இதையடுத்து அவர் தென்கரை காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications