Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரியாா் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை

பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருந்த அங்கமுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: பணி நியமன முறைகேடு புகாரில் சிக்கிய பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருந்த அங்குமுத்து அவரது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக அங்கமுத்து, கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை பொறுப்பேற்றார். அந்தக் காலகட்டத்தில் பல்கலைக்கழகத்தில் அலுவலகப் பணியாளர் முதல் பேராசிரியர்கள் வரை பலர் நியமிக்கப்பட்டார்கள்.

Periyar University's Ex Registrar Angamuthu committed suicide

அந்த நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்திருந்தது. முறைகேடு வழக்கு தொடர்பாக அவர் பதிவாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் பெரியார் பல்கலையின் உடற்கல்வி துறை இயக்குநராக பணியாற்றி வந்தார். இன்று பெருந்துறையில் உள்ள அவரது வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அங்கமுத்து பதிவாளராக இருந்தபோது பல்கலைக்கழக வரவு செலவு கணக்குகள் ஆவணங்கள் தொலைந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பல்கலைக்கழக உயர்மட்டக்குழு விசாரணை நடத்தி வரும் நிலையில் அங்கமுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+