நடுக்குப்பத்தில் நிரந்தர மீன் சந்தை அமைக்கப்படும் - முதல்வர் ஓபிஎஸ்
கலவரத்தில் பாதிக்கப்பட்ட நடுக்குப்பத்தில் நிரந்தர மீன்சந்தை அமைக்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 110 விதியின் கீழ் முதல்வர் இதனை அறிவித்துள்ளார்.
சென்னை: வன்முறையின் போது தீக்கிரையான நடுக்குப்பத்தில் நிரந்தர மீன் சந்தை அமைக்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். 70 லட்சம் ரூபாய் செலவில் இந்த புதிய மீன் சந்தை அமைக்கப்படும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் ஏராளமான இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் ஆகியோர் காயமடைந்தனர்.

அப்போது ஏற்பட்ட வன்முறையில் ஏராளமான வாகனங்கள் சூறையாடப்பட்டன. சென்னை நடுக்குப்பம் பகுதியில் இயங்கிய மீன் மார்க்கெட் மற்றும் மீனவர்களின் குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டன.
இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மீண்டும் அங்கு வியாபாரம் செய்யும் வகையில் மீன் சந்தை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 110 விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் "வன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். நடுக்குப்பம் தெற்கு பகுதியில் தற்காலிக மீன்மார்க்கெட் அமைக்கப்படும்.
சென்னை நடுக்குப்பத்தில் ரூ.70 லட்சம் மதிப்பில் நிரந்தர, நவீன மீன் சந்தை அமைக்கப்படும்". இவ்வாறு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையில் அறிவித்துள்ளார்.மேலும் ஓரிரு நாட்களில் நடுக்குப்பத்தில் தற்காலிக மீன் சந்தை அமைக்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications