அரவக்குறிச்சியில் மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் அருகே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தேர்தல் பணிமனை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் கே.சி. பழனிச்சாமியும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் போட்டியிடுகிறார்கள். இந்நிலையில் இந்த தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

Petrol bomb hurled at Senthil Balaji's office

இதையடுத்து அரவக்குறிச்சியில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. வரும் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் அரவக்குறிச்சியில் மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் செந்தில் பாலாஜியின் தேர்தல் பணிமனை மீது நேற்று இரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள் பதறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி பேரூராட்சி தலைவரும், அதிமுக நிர்வாகியுமான சையத் இப்ராஹிம் மற்றும் கட்சி நிர்வாகிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+