இன்றும் புதிய உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை.. எவ்வளவு தெரியுமா?
சென்னை: பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து 13வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இதனால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்த எண்ணெய் நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதன் விலையை அதிகரித்து வருகின்றன.
இதனிடையே கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. லிட்டருக்கு ரூ.80-ஐ தாண்டியுள்ள பெட்ரோல் விலையால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், இன்றும் அதன் விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அவதியுற வைத்துள்ளது.
இதனிடையே எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் 41 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.83.54 காசுகளாகவும், டீசல் 47 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.76.64 காசுகளாகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications