தொடர்ந்து 17வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்கள் கவலை
Recommended Video
சென்னை: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 17வது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்து வருகிறது. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய்யின் விலை உயர்வுக்கு ஏற்றபடி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. கடந்த 16 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தினமும் 20 காசு, 30 காசு அதிகரித்து வந்தது.
இந்நிலையில் 17வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை 17 காசும், டீசல் விலை 15 காசும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ81.43 காசுகள் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று 1 லிட்டர் டீசல் விலை ரூ.73.18 காசுகள்.
டெல்லியில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ78.43 காசுகள்; மும்பையில் ரூ 86.24 காசுகள்; கொல்கத்தாவில் ரூ81.08 காசுகள்; புதுவையில் ரூ 77.17 காசுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
டெல்லியில் 1 லிட்டர் டீசல் விலை ரூ 69.31 காசுகள்; மும்பையில் ரூ 73.79 காசுகள்; கொல்கத்தாவில் ரூ71.88 காசுகள்; புதுவையில் ரூ71. 59 காசுகள் விற்பனை செய்யப்படுகின்றன.