For Quick Alerts
For Daily Alerts
Just In
மதுரையில் திடீர் சோதனை- 2 பைப் வெடிகுண்டுகள் பறிமுதல் என போலீஸ் தகவல்
மதுரையில் பைப் வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை: மதுரையில் திடீரென போலீசார் சோதனை நடத்தியதில் 2 பைப் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இருவரை பிடித்து விசாரிப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள மூங்கில் கடை ஒன்றில் போலீசார் திடீரென சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்து 1 அடி நீளமுள்ள இரண்டு பைப்புகளை போலீசார் கைப்பற்றினர்.
இதில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு இருந்தது என போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக புதூர் காந்திபுரத்தை சேர்ந்த அப்துல் ரகுமான், விஸ்வநாத நகரை சேர்ந்த அப்துல்லா இருவரிடம் விசாரணை நடத்துவதாகவும் போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.
Comments
English summary
pipe bomb recovered in madurai police arrested two person